Friday, May 17, 2013

சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும்! - குட்டிக்கதை


ஒருவர்:       வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும்சாமர்த்தியமும் வேண்டும்.

மற்றவர்:      சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்னசம்பந்தம்?

ஒருவர்:       நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம்சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

மற்றவர்:      இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்டசாக்கடைத்தண்ணீர்.

ஒருவர்:       இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னுகவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டுகொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கிலவச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரிநீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

மற்றவர்:     அது ஒண்ணும் கஷ்டமில்லைஇதோபாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

ஒருவர்:      சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பதுஉறுதி ஆகி விட்டதுஇருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

மற்றவர்:  எப்படிச் சொல்றீங்க?

ஒருவர்:      ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்தசாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயிலவச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலேவச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

மற்றவர்:      நான் மறுக்கலே.இருந்தாலும்ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரிலஇருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்டகாபி.

ஒருவர்:      பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமேதெரியலே!

மற்றவர்:     குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!

No comments:

Post a Comment