Wednesday, May 15, 2013

வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்


ஐ.பி.எல். கிரிக்கெட் 61வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு தொடங்கியது. இதில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ஹசி மற்றும் விஜய் களம் இறங்கினர்.
இருவரும் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க ராஜஸ்தான் அணி மிகவும் போராடியது. இருவரும் ஜோடி சேர்ந்து 83 ரன்கள் எடுத்தனர். ஹசி 40 ரன்கள் எடுத்த நிலையில் பின்னி பந்தில் போல்ட் ஆனார்.
பின்னர் வந்த ரெய்னா 1 ரன்னிலும், கேப்டன் தோனி 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். விஜய் சிறப்பாக விளையாடி 50 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் பிராவோ ஜோடி சேர்ந்து இறுதியில் அணியின் ரன்னை உயத்தினர். ஜடேஜா 12 ரன்னிலும், பிராவோ 23 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்தது.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் டிராவிட் மற்றும் ரஹானே களம் இறங்கினார்கள்.
ரஹானே 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பால்க்னர் 1 ரன்னிலும், சாம்சன் 0 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அடுத்து டிராவிட் உடன் ஜோடி சேர வாட்சன் களம் இறங்கினார். 22 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிட் ஆட்டம் இழந்தார். அடுத்து பின்னி களம் இறங்கி வாடசனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
வாட்சன் 34 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடித்து 70 ரன்கள் குவித்தார். பின்னி 23 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து 41 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் குவித்து சென்னையை வீழ்த்தியது.
இந்த ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் விளையாடி எந்த அணியிடமும் தோற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment